சுகமான வாழ்க்கை

சுகமான வாழ்க்கைக்கு இறையடியார் என்ற தகுதியை ஏன் பெறவேண்டும் ?

மனிதனாகப் பிறந்தவன் இறையடியார் என்ற தகுதி உடையவனாக ஏன் வாழ வேண்டும்

மனிதனுடைய பிறப்பின் நோக்கமே 
ஒவ்வொரு மனிதனும் இறையடியார் என்ற தகுதி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இறைவன் படைக்கிறான்

ஒரு மனிதன் இறை அடியார் என்று கூற வேண்டுமென்றால் அவன் இறைவனின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் இத்தகைய அவர்களே இறையடியார் என்று அழைக்கின்றனர்


ஒரு மனிதன் இறைவனுடைய கொள்கை  பின் பற்றிசெயல்படும் போதுதான் அவன் சுகமான வாழ்வதற்கான தகுதியைப் பெறுகிறான் சுகம் என்பது நீடித்த தன்மை கொண்டது நிலைத்திருக்கும் தன்மை கொண்டது அத்தகைய சூழலை உடையது சுகம்என்ற வாழ்க்கை
ஒரு மனிதன் இறையடி யார் என்ற தகுதியை பெற வேண்டுமெனில் அவனிடத்தில்  ஸத்வ குணம் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்

இந்த அளவிற்கு ஸத்வ குனத்திற்கு உயர்வான இடத்தை தந்திருக்கின்றான்

இறைவன் ஒரு மனிதனின் தகுதியை குணத்தால் மட்டுமே நிர்ணயம் செய்கின்றான் அதற்கான குணங்களும் எண்ணங்களும் மனிதனுக்கு இருக்க வேண்டும்

இனி ஒரு மனிதன் இறைவனுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அவன் நள் எண்ணங்களாலும் குணத்தாலும் மட்டுமே நெருங்க இயலும்

மனிதராகப் பிறந்தவன் மூன்று தன தன்மைகளில் செயல்படக்கூடிய இருக்கின்றான் ஒன்று ரஜோ குணம் மற்றொன்று தமோகுணம் மூன்றாவது ஸத்வ குணம்

மற்ற இரண்டு குணங்களை வீட்டைவிட்டு ஸ்த்வ குணத்தில் வாழும் மனிதனை மட்டுமே இறைவன் விரும்புகிறான்  அவனால் மட்டுமே இறையடியார் என்ற தகுதியை பெற இயலும்

மனிதன் வாழும் காலத்தில் எந்தவித முயற்சியும் செய்யாமல் இறைவனை நெருங்குவது  இயலாத காரியம்

மனித வாழ்க்கையை இறைவன் விரும்புவதற்காகதான்மனிதனை இறைவன் படைத்திருக்கிறான்

இறைவன் ஒன்றை விரும்பி விட்டால் அதை நோக்கி மனிதன் பயணிக்க வேண்டும் என்பது விதி

 சுகமான வாழ்க்கை என்பது பொருளாலோ பட்டததாலோ செல்வத்தாலோகிடைக்கக்கூடியது அன்று இந்த மூன்றையும் ஒரு மனிதன் பெற்றிருந்தாலும் அவன் சுகமாக வாழ்கிறேன் என்று நிச்சயமாக கூற இயலாத நம்மை சுற்றியுள்ள மனிதர்களையும் வரலாற்று மனிதர்களையும் பார்த்தாலே விளங்கும்


ஏனெனில் சுகம் என்பதை மனதிற்கு தந்திருக்கின்றான் ஆனால் அந்த மனமோ புறத்தின் அடிப்படையில்மகிழ்ச்சிகொள்ள கூடிய தன்மையில் மனதை படைக்கவில்லை

ஒரு மனிதனின் மனம் மகிழ்ச்சி பெற வேண்டும் என்றால் அவன் இறைவனின் கொள்கைகளை பின்பற்றும் போது தான் அந்த தகுதி இறைவன் தருகின்றான்

மனிதனுடைய செயல்கள் இறைவனின் கட்டளையின்படி செயல் படுபவரை  இறைவன் விரும்புகிறான் அதன் காரணமாக அவர்கள் இறை அடியார் என்ற தகுதியைப் பெறுகிறான்

இந்த தகுதியைப் பெற்ற மனிதர்களே சுகமான வாழ்க்கையில் நீடித்த வாழ்க்கை தவணையில் வாழ வைக்கிறான் 

அத்தகைய உயர்வான வாழ்க்கையை வாழ இறையடியார் என்ற தகுதி பெற வேண்டி  மனிதனை இறைவன் படைத்துள்ளான்







Comments

Popular Posts